Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் மாரியப்பனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |