தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது தண்ணீர் தொட்டியில் ராகேஷ் மூழ்கிக் கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
உடனடியாக தனது குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ராகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.