டெகாலா பிரசாந்த் என்ற காவல் ஆய்வாளர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கனபாபுரம் பகுதியை சேர்ந்த டேகாலா பிரசாந்த் என்பவர். காவல் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தினமும் சக காவலர்களுடன் இணைந்து பேட்மிட்டன் விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் வழக்கமாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் அவருக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரின் திடீர் மறைவு சக காவலர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.