Categories
திருச்சி மாநில செய்திகள்

விளையாடச் சென்ற சிறுவன்…. காணாமல் போனதால் பதற்றம்…. பெற்றோர் கண்ட காட்சி….!!

திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- லட்சுமி தம்பதியினருக்கு  4  வயதில் கௌதம் வாசுதேவன் என்ற மகன் இருந்தான். இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லணை அருகே உள்ள கிளிக்கூண்டு கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது தெருவில்  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் வாசுதேவன் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அருகிலிருந்த நாட்டு வாய்க்கால் பகுதியில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சிறுவன் தண்ணீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு  சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்  மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |