வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10 சதவீதத்துக்கு மேல் உயர இருக்கிறது. இதனிடையில் திட்டன்தீட்டப்பட்ட மருந்துகள் விலையில் 10.7 % விலை உயர்வினை அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7 % விலை உயர்வை அனுமதித்துள்ளது. இவையே அனுமதிக்கபட்ட அதிகபட்சமான விலை உயர்வாகும்.
இதன் காரணமாக தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலிலுள்ள 800-க்கு அதிகமான மருந்துகளின் விலையானது வரும் ஏப்ரல் முதல் அதிகரிக்கும் என்றும் மேலும் இப்பட்டியலில் பாராசிட்டாமல் போன்ற மருந்துகள், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.