Categories
தேசிய செய்திகள்

விரைவில் 18 மாத நிலுவைத்தொகை….? அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்….!!!!

விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமரை அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பணம் செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது நடந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கு பெரிய தொகை டெபாசிட் செய்யப்படும். இது குறித்த கோரிக்கையில் உறுதியாக ஊழியர்கள் உள்ளார்கள். அரசு ஊழியர்களில் நிலை-1 பிரிவு ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம், லெவல்-13 அல்லது லெவல்-14 ஆகியவற்றுக்கு நிலுவைத் தொகை ரூ.1,44,200 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பாரதி பென்ஷனர்ஸ் மஞ்ச் (பிஎம்எஸ்) பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை மிகப் பெரிய தொகை என்றும், இதுவே தங்களின் வாழ்வாதாரம் என்றும் ஓய்வூதியதாரர்கள் கூறுகின்றனர். 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA/DR நிலுவைத் தொகையை நிதியமைச்சகம் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். DA/DR நிறுத்தப்பட்டபோது, சில்லறை பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உச்சத்தில் இருந்ததாகவும் ஓய்வூதியதாரர்கள் வாதிடுகின்றனர்.

Categories

Tech |