Categories
மாநில செய்திகள்

விரைவில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும்…. வருவாய்த்துறை அமைச்சர் தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,  1,47,200 ஏக்கர் அளவிலான பஞ்சமி நிலங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் கையில் இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை பட்டியலின மக்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு இருந்தால், உரிமையாளர்களிடம் இருந்து அந்த நிலத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |