Categories
தேசிய செய்திகள்

“விரைவில் இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி”…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரிய வகை ரசாயன பொருட்கள்…!!!!!

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரிய வகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சாதனையாக 6 புதிய வகை மேற்கோள் பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இருக்கிறது. உலகம் முழுவதும் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களை தேவையான தூய்மையான ரசாயனம் ஆக இது இருக்கிறது. கவுகாத்தியில் உள்ள தேசிய மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆறு பொருட்களை  ‘தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் (என்டிடிஎல்)’ தயாரித்துள்ளது.

இதன் மூலமாக இந்த வகை வேதிப் பொருட்களை உருவாக்கி உள்ள சில ஆய்வகங்களில் ஒன்றான என் டிடிஎல் திகழ்கிறது. மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாகூர் என் டிடிஎல் 15ஆவது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விளையாட்டு துறை செயலர் சுஜிதா சதுர்வேதி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ரசாயன பொருட்களை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்த சாதனை பற்றி பேசியதாக தாக்கூர்,  இந்த மூன்று நிறுவனங்களின் விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன். இடையறாமல் பாடுபட்டு அவர்கள் இந்த பொருட்களை உருவாக்கி இருக்கிறார்கள். இது பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை நோக்கிய சாதனையாகும். வெகு விரைவில் இந்த பொருட்கள் நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |