மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு சிகிச்சைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தினால் எங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
மேலும் எந்த ஒரு கொள்கையும் எதிர்காலத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் அரசு சுகாதார வசதிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக இந்திய ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது நம் நாட்டின் இளைஞர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும்போது உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ சுற்றுலா மையமாக நமது நாடு மாறுகின்றது. மேலும் எல்லோரும் நலம் என்பதை உலகத்தைப் பற்றியே இந்தியாவின் கண்ணோட்டமாக இருக்கிறது.
அரசின் ஆராய்ச்சி கொள்கையால் உலகில் உள்ள ஒவ்வொரு 10 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் கிட்டத்தட்ட மூன்று பேர் இந்தியர்களாக திகழ்கின்றார்கள் தனியார் அல்லது பொது நிறுவனங்களில் புதுமையான ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் திறமையான இளைஞர்களை ஊக்குவித்து அதிரவளிப்பதே அரசின் ஆராய்ச்சி கொள்கையாகும். மேலும் இந்தியா கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.