Categories
அரசியல்

விருதுகளை குவித்த ஹர் கோவிந்த் குரானா…. யாருன்னு தெரியுமா?…. இதோ சில தகவல்கள்….!!!!

அமெரிக்கவாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானா. இவர் 1922 ஜனவரி 9ஆம் தேதி அப்போதைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முல்தான் மாவட்டத்திற்கு உட்பட்ட ராய்ப்பூரில் பிறந்தார். சுமார் 100 குடும்பங்கள் உடைய அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் தொடங்கியது. இளம் வயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். இதையடுத்து குரானா லாகூரில் இருந்த பஞ்சாப் பல்கலையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

அங்கு  பி.எஸ்சி பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். அதன்பின் 1945ம் வருடம் வேதியியலில் முதுகலைப்பட்டப்படிப்பை குரானா முடித்தார். 1945 ம் வருடத்தில் இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் பல்கலையில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். பின் 1948-1949களில் சுவிட்சர்லாந்திலுள்ள பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அவர் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். 1949 இறுதியில் குரானா இந்தியா திரும்பினார். அதன்பிறகு மீண்டுமாக இக்கிலாந்து திரும்பிய அவர், 1950-1952 ஆம் வருடங்களில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

1952ல் கனடா சென்ற குரானா அங்கு எஸ்தர் எலிசபெத் சிப்லர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1960ல் விஸ்கான்சின் பல்கலையில் அமைந்துள்ள நொதிகள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தில் குரானா இணைந்து ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. 1962 -1970 வரை பேராசிரியராகவும், உயிர்வேதியல் பேராசிரியராகவும் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் குரானா பணிபுரிந்தார். கடந்த 1959ல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்தார்.

1960ம் வருடத்தில் அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் செயற்கை உயிர் உற்பத்தித்துறையில் குரானா பணியாற்றத் தொடங்கினார். அங்கு மார்சல் நோரென் பர்க்-உடன் இணைந்து குரானா மேற்கொண்ட ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்காக 1968ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல்பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி ஆகிய 3 பேருக்கும் வழங்கப்பட்டது. அதன்பின் 1970ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவியானது குரானாவுக்கு வழங்கப்பட்டது.

அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றியபணி உலகப்புகழ் பெற்றது ஆகும். அதாவது, எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) எனும் நுண்ணுயிரிகள் மனித மற்றும் விலங்கினங்களின் குடற்பகுதியில் இருப்பது ஆகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் முன்பே அதன் கட்டமைப்பை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குரானாவும் அவரது குழுவினரும் இந்த நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப் படியாக முயன்று இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். அதனை தொடர்ந்து 1976ல் இந்த செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரி, இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இந்த சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தம் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவின் குழுவில் இருந்த 25 பேருக்கும் சுமார் ஒன்பது வருடங்கள் தேவைப்பட்டது. நோபல்பரிசு தவிர குரானா மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.

அதாவது 1968 – ஹாவாயில் ஹோனலூலுவில் உள்ள வாட்டுமுல் அமைப்பின் சிறப்புமிக்கச் சேவைக்கான விருது, 1969 – பத்ம பூசண் விருது ,1971-ல் பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்கக் கழகத்தின் செயல்வெற்றிச் சாதனைக்கான விருது, 1972-ல் கொல்கத்தா போஸ் நிறுவனத்தின் ஜே.சி. போஸ் பதக்கம், 1973-74 வருடத்துக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் சிகாகோ பிரிவு வில்லர்ட் கிப்ஸ் பதக்கம், கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது, லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு, ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது, முதலிய விருதுகளை குரானா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2011-ம் வருடம் நவம்பர் 9ம் தேதி குரானா இறந்தார்.

Categories

Tech |