Categories
மாநில செய்திகள்

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் பின்னடைவு…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் 607 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். பூந்தமல்லி தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் 1343, திமுக வேட்பாளர் கயல்விழி 864 வாக்குகள் பெற்று உள்ளனர். விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்து உள்ளார். ஆவடியில் மாஃபா பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Categories

Tech |