சேலத்தில் காவலர்கள் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி சேலம் சரக டிஐஜி நான்கு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க மாநில உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.