Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…. வாலிபர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார்.

அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து அதற்குள் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளனர். அவற்றில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவரிடம் ரூ.24,37,000 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது குறித்து சென்னை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |