உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சக புதிய வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி சான்று மற்றும் பரிசோதனை சான்று போன்ற அனைத்து விவரங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். ஒமிக்ரான் பாதிப்பு உடையவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.