விமானத்திற்குள் சிகரெட் பிடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. துபாயில் இருந்து டெல்லி வந்த பல்விந்தர் கட்டாரியா என்பவர், விமானத்தில் விதிகளை மீறி சிகரெட் பற்றவைத்து புகைபிடித்தார். அவர் புகை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் மீது விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில், பல்விந்தர் கட்டாரியா மீது விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் விமானத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ குறித்தும் பாபி கட்டாரியா மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடுரோட்டில் அமர்ந்து பாபி கட்டாரியா மது குடித்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.