Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விபத்து வழக்குகளில் சாட்சியம் அளிக்க வராத துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2016ம் வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பணிபுரிந்து வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அவ்வழக்கு குறித்த சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் இருந்துவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இப்போது சரவணன் திருப்பத்தூர் ஆம்பூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2017-ம் வருடம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஏழுமலையும், ஒரு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பியும் சாட்சியம் அளிக்க இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை. அவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இவர் இப்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஒரே நீதிமன்றத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 2 வழக்கு விசாரணையும் வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |