Categories
உலக செய்திகள்

வின்ட்சர் கோட்டையில் தொடங்கிய…. மகாராணியின் இறுதிச் சடங்கிற்கான…. அணிவகுப்பு பயிற்சி…. வெளியான புகைப்படம்….!!

திங்கள்கிழமை நடைபெற இருக்கும் மகாராணியின் அரசு இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் தொடங்கியது.

பிரித்தானியாவை 70 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மகாராணியின் இறப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனிலுள்ள வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராணியாரின் பூத உடல் இளவரசர் பிலிப்பிற்கு அடுத்தப்படியாக அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியுள்ளது. இதில் இராணுவ இசைக்குழுக்கள் தங்களது அணிவகுப்பு மற்றும் இசைக்கருவிகள் ஆகியவற்றை பயிற்சி செய்து வருகின்றனர். சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய இந்த பயிற்சி கேம்பிரிட்ஜ் கேட் வழியாக வின்ட்சர் கோட்டையின் மைதான நுழைவுவாயில் வரை செல்கின்றது.

Categories

Tech |