திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகர் உலா நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றி நேற்று 4ஆம் திருவிழா நடைபெற்றுது. இந்த 4 ஆம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவதிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகர் மற்றும் சந்திரசேகர் 3ஆம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாச்சலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அதன்பிறகு அங்கிருந்து கொண்டு வரப்பட்டு 5 ஆம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும் சந்திரசேகரும் எழுந்தருளினார். அதன்பிறகு இரு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலின் 5 ஆம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. அதன் பிறகு இரவு 9 மணிக்கு கோவிலின் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ விழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.