நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஹரியானா மாநிலம் சோனி பேட் பகுதியில் மிமார்ப்பூர் காட் என்ற இடத்தில் சிலை கரைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,மகன் மற்றும் உறவினர்கள் என ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அது மட்டுமல்லாமல் சிலையை கரைக்கும் போது ஆற்றில் நீர் தீ வெல்லம் ஏற்பட்டதால் ஒன்பது பேர் ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீட்பு படையினர் தீவிரமாக சோதனை செய்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேரில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். விநாயகர் சிலை கரைப்பின் போது ஒரே மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆற்றில் மூழ்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.