Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதவிதமான வாகனங்களில் எழுந்தருளும் பெருமாள்…. வீதி உலாவில் பிரம்மாண்ட தோரணை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருநெல்வேலியில் ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் கடந்த 20ஆம் தேதி பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெற்று வருவகிறது.

அங்கு தினமும் காலையில் பல்லாக்கு சேவையும் இரவில் விதவிதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.இவ்விழாவில் பெருமாள் கருட சேவை செய்து கொண்டே வீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் வெள்ளி தேரிலும் குதிரை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க உள்ளார்.

Categories

Tech |