தொழிலதிபர் விஜய் மல்லையா விடமிருந்து 3,600 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் பாங்க் தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். இதனையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஸ்காட்லாந்து காவல்துறை அளித்துள்ள மூன்று வருட தண்டனையில் இருந்து ஜாமினில் வெளியே உள்ளரர். அவரை நாடு கடத்துவது தொடர்பாக தொடர்ந்து இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான பணமோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் ஸ்டேட் வங்கியின் தலைமையில் இயங்கும் வங்கிகள் கூட்டமைப்பு விஜயா மல்லையாவிடம் இருந்து இதுவரை 3,600 கோடி ரூபாயை மீட்டு உள்ளதாகவும் இன்னும் 11,000 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.