தமிழ் சினிமா திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் விஜய் அஜித்திற்கு இடையே தான் போட்டி நடைபெற்று வருகின்றது. இதனால் சமூக வலைதளங்களிலும் விஜய் அஜித் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பைனான்சியராக தயாரிப்பாளராக விநியோகஸ்தராக உள்ள மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் நேற்று நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவா ஒரு சிலர்தான் இருப்பாங்க மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஐயா இருந்தாரு, அதற்கடுத்து ரஜினி சார் இருந்தாங்க, அடுத்து விஜய் சார், அந்த வரிசையில் இப்போ நடிகர் சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ரசிகராக இருந்து வருகிறார் என பேசி உள்ளார். அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனும் நன்றி என்பதை கைகூப்பி அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் விஜய் இருவரும் இன்னமும் டாப் வசூல் நடிகர்களாக தமிழ் சினிமா உலகில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனை அன்பு செழியன் சேர்த்து பேசி இருப்பது மற்ற நடிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
அதாவது அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் போன்றோர் இந்த இடத்தில் இல்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் என கோலிவுட்டிலும் பேசி வருகின்றார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்த படங்களாக அமைந்துள்ளது. அந்த வரிசையில் பிரண்ட்ஸ் திரைப்படம் இடம் பிடித்தால் அவரது மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும். சிவகார்த்திகேயன் தற்போது அயலான் படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார் அடுத்தது மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.