பிரபல நட்சத்திர தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு மறு வீட்டிற்க்காக நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றனர். இவர்கள் ஹனிமூனில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. மேலும் நடிகை நயன்தாரா தாய்லாந்தில் இருந்து திரும்பிய பிறகு மும்பையில் நடக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது படப்பிடிப்பு முடிந்து நயன்தாரா கிளம்பும் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கட்டி அணைத்து ரொமான்ஸ் செய்யுமாறு போட்டோ எடுத்துள்ளனர்.
இந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு நினச்சா தோணும் இடமே என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.