மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் கோபிநத் வெளியிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் கோபிநத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் “கல்லூரிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். மேலும் பிரதமரின் சுற்றுலா திட்ட பயனாளிகளுக்கு எல்ஜிபி சிலிண்டர்கள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ 25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
மேலும் அந்த அறிக்கையில் சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனை அடுத்து மூத்த குடிமக்களுக்கு மேலும் ரூ.1000 பென்சன் உயர்த்தப்படும்” எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இதனிடையே மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது. எனவே மணிப்பூரில் தேர்தல் களத்தில் பல கட்சிகளில் இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் பலமான போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.