சிவன் கோவில்களில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் வன்னி மரமும் இருக்கும். சிவாலயங்களுக்கு செல்லும்போது அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, வெள்ளிக் கிழமைகளில் அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் மறையும்.
சிவபெருமானின் 64 வடிவ மூர்த்தங்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். இவரது சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், கடன் தொல்லைகள் அகலும்.
Categories
வாழ்க்கையில் நாம் சந்திக்கும்…. பெரிய பிரச்சனைகளுக்கான சிரிய தீர்வு….!!!!!
