வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்கிளம்பி காப்பு விளை பகுதியில் அப்துல் சலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலீல் ரகுமான்(27) என்ற மகன் இருந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த ரகுமான் அந்த வேலை பிடிக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ரகுமான் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த ரகுமான் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.