Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர்…!!

வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த விசாரணையில் கோட்டைசாமியை கொலை செய்தது கரட்டுபட்டியை சேர்ந்த ஜெயசூர்யா, சுபாஷ், சிவா, நாச்சிகுளம் பூவேந்தன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோட்டை சாமியின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் எதற்காக கோட்டைசாமியை கொலை செய்தார்கள் என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாஸ்கர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |