Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் கடத்தி கொலை… 9 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

வாலிபரை கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள சூழப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதுடைய உதயகுமார். இவர் ரவுடியாக சுற்றி வலம் வந்துள்ளார். இவர் தற்சமயம் திருவள்ளூரை அடுத்துள்ள வேப்பம்பட்டில் இருக்கின்ற தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் வசித்த 26 வயதுடைய ஜீவா என்பவருடைய வீட்டின் முன் அதே பகுதியில் வசித்த 35 வயதுடைய மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சத்தமாக பேசினார். இதை தட்டி கேட்ட ஜீவாவை மோசஸ் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஜீவா புகார் கொடுத்துள்ளார். இத்தகவலை அறிந்த உதயகுமார் மோசஸ் வீட்டிற்கு சென்று அவருடைய தாயாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை வலுக்கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். அதன்பின் சண்முகபுரம் அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் இருக்கின்ற முட்புதருக்குள் வைத்து உதயகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இத்தகவல் அறிந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து திமுக பிரமுகரின் மகனான 19 வயதுடைய சரண், 35 வயதுடைய அப்புன், 24 வயதுடைய மாணிக்கம், 21 வயதுடைய முகுந்தன், 20 வயதுடைய சாமுவேல், 40 வயதுடைய வினோத்குமார், 23 வயதுடைய பிராங்கிளின், 19 வயதுடைய மாரிஸ் மற்றும் 19 வயதுடைய ராமமூர்த்தி ஆகிய 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற முக்கிய குற்றவாளியான மோசஸை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |