Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமா….? பெண்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |