Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வாமன அவதார கோட்டோவியம்”…. வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு….!!!!!

மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் சின்ன கண்ணனுர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பாண்டியர் நாடு பண்பாட்டு மைய வரலாற்றை ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு மூன்று வாமன அவதார குறியீடு மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட நிலக்கொடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, மூன்று திசைகளில் இந்த உருவம் பொறித்த கல் நடப்பட்டு இருக்கின்றது. நிவந்தம் கொடுக்கும் நிலத்தின் நான்கு திசைகளிலும் கற்கள் நடுவது வழக்கம். ஆனால் தற்பொழுது மூன்று கற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொன்றும் நான்கு அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டிருக்கின்றது. இதில் வாமன அவதார உருவம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டிருக்கின்றது.

கிராமத்தின் கிழக்கே அமைந்த கல்லின் உருவத்தில் வலது கையில் குடையை பிடித்தவாரும், இடது கையில் கமண்டலத்தினை கீழே தொங்கவிட்டபடியும், இடையில் ஆடையானது முட்டிக்கால் வரைக்கும் அணிந்தபடி நின்ற கோழத்தில் இந்த கோட்டோவியம் இருக்கின்றது. இக்கல்லின் உருவத்தின் கையில் குடையினை பிடித்தவாறு வாமன உருவம் புதைந்து இருக்கின்றது.

மேற்கு அமைந்த கல் ஊரின் நாடக மேடை அருகே அமைந்திருக்கின்றது. இவை கிராம மக்களால் முனிஸ்வரன் சாமியாக வணங்கப்பட்டு வருகின்றது. இதில் மூன்று வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இந்த எழுத்துக்கள் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுவதால் அதன் பொருளை அறிய முடியவில்லை. மேலும் இவை எல்லை கற்களாக நடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகின்றது என கூறியுள்ளனர்.

Categories

Tech |