நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி, அதில் ஒரு மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. காவல் நிலையத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கிறிஸ்டோபர் ஜெயக்குமார் தலைமறைவாகியுள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.