Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாங்கிய சில நாட்களிலேயே பழுது” தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

தனியார் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிந்தன்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே பழுதான எந்திரங்களை சரி செய்து தருமாறு சசிகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் சசிகுமார் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதனால் சசிகுமார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி மரம் அறுக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினர் நுகர்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பழுதான இயந்திரங்களை சரி செய்து வழங்குவதோடு, வழக்கு செலவு தொகை 5,000 ரூபாயையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |