தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர்.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவும் வேகமாக பரவி வருகிறது. எனவே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் மாஸ்க் அணியாவிட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.