இன்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம் வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதுதான். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.