ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுழற்சி முறையில் ஈடுபடும் போலீசார் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்வது வழக்கமாகும். இந்த சூழலில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் சோதனை சாவடி அருகே வந்தபோதும் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த ஏட்டை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சக போலீசார் அளித்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள். இது பற்றி கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் வன்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான முத்துக்குமார்(46), கிருஷ்ணா பாளையம் ரோட்டை சேர்ந்த அருணாசலத்தின் மகன் சினிவாசன்(28), அவரது தம்பி முரளிதரன் (27) போன்றோரை கைது செய்திருக்கின்றனர்