பொதுப் போக்குவரத்து ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, தகுதிச்சான்று, அனுமதி சீட்டு உள்ளிட்டவைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாகன தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சகம் மீண்டும் அக்டோபர் 31ஆம் தேதிவரை வாகனங்களுக்கான ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து, ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, தகுதி சான்று, அனுமதிச்சீட்டு உள்ளிட்டவைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.