தமிழகம் முழுவதும் அண்மையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் பலரும் ரசீது பெற்றுவிட்டு அபராத தொகையை செலுத்தாமல் டிமிக்கி கொடுப்பதால் போக்குவரத்து போலீசார் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழகத்தில் இனி இந்த போக்குவரத்து விதிகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.