ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகளால் பதிலடி கொடுக்கிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
மும்பை வடாலா பகுதியில் கட்டப்பட உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசியபோது, மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்குள் குழப்பம் எதுவும் இல்லை.
இந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தரையில் தனது காலை உறுதியாக நிலை நிறுத்தி மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகா விகாஸ் அகாடி அரசு வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
பலமுறை அறிவிப்புகள் வெளியாகி அடிக்கல் நாட்டப்படும். ஆனால் அதற்கு மேல் எதுவும் நடைபெறாது. ஆனால் நாங்கள் அடிக்கல் நாட்டிய நாளில் இருந்தே பணியை தொடங்குகியிருக்கிறோம். அதுதான் முக்கியம். 2025-ல் ஜி.எஸ்.டி. பவன் கட்டுமான பணிகள் முடிவடையும். மாநில அரசை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகள் மூலம் மகாவிகாஸ் கூட்டணி பதிலடி கொடுத்து வருகிறது.என அவர் கூறியுள்ளார்.