Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வலி தாங்கவே முடியல” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையமான்குளம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயசாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்சர் காரணமாக ஜெயக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |