Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த பெண்….கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல்(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் வலியில் அலறி சத்தம் போட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |