வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காந்திபுரம் சாலை பகுதியில் வைஷ்ணவி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைஷ்னடி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை.
இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக வைஷ்ணவி விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியக வீட்டிற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.