வலிப்பு நோயால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக முருகன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் திடீரென மருத்துவமனையில் விட்டு வெளியே வந்துள்ளார்.
இவர் வரும் வழியில் ஊட்டி கூட்ஷெட் சாலையில் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊட்டி நகர மேற்கு பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.