தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கிணற்றில் ஆரியமாலாவின் உடல் மிதந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.