Categories
தேசிய செய்திகள்

வர மிளகாய் விலை உயர்வு…. கிலோ ரூ.300 க்கு விற்பனை…!!!!!!

சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் மிளகாய் வத்தல் குவிண்டால் அடிப்படையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே  கொள்முதல் செய்து சாக்குமூட்டைகளில் வைத்து  லாரிகள், ரெயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு  அனுப்பி வைக்கின்றனர்.

இந்தநிலையில் சேலம் சந்தையில் வரமிளகாய் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.170 விற்பனையான வரமிளகாய் தற்போது ரூ.300 க்கு விற்பனையாகிறது. இதேபோல் ராம்நாடு வரமிளகாய் அதிகபட்சமாக கிலோ 400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் 50% முதல் 75% வரை உயரும் எனக் கூறுகின்றனர். இந்த நிலையில் சோம்பு, சீரகம், மல்லி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் ரூபாய் 50 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |