Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 28 ஆம் தேதி அம்மாவாசை நாளில்…. ஓபிஎஸ் அடுத்தகட்ட ஆலோசனை…. ஆட்டம் ஆரம்பம்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது OPS மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இருபத்தி எட்டாம் தேதி அமாவாசை நாளில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |