தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டேராடூனில் உள்ள இந்திய ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் 18ம் தேதி நடைபெறும் என்று சென்னை, மதுரை, கோவையில் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.