கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து நகைக்கடன் எப்போது செய்யப்படும் என்றும் மக்களிடையே எதிர்பார்த்து எழுந்து வருகிறது.
இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு வரும் திங்கள் கிழமை முதல் கடன் திருப்பி அளிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள் கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.