Categories
மாநில செய்திகள்

வருகிற 1-ஆம் தேதி முதல்…..நெல்லை- செங்கோட்டை, திருச்செந்தூர் ரயில் பயணிகளுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல், நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே கூடுதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்களானது இயக்கப்படுகிறது. இதையடுத்து நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லாத  சிறப்பு ரெயிலானது, நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, அதன் பின் காலை 11.25 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.

மேலும் இதே மார்க்கத்தில் உள்ள மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலானது, நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, அதன் பின் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். இதனை தொடர்ந்து மறுமார்க்கத்தில் செங்கோட்டை – நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு, பிறகு மாலை 5.20 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

இந்நிலையில் இதே மார்க்கத்தில், மற்றொரு செங்கோட்டை – நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலானது, செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.25 மணிக்கு நெல்லை வந்து சேரும். மேலும்  இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையடுத்து திருச்செந்தூர் – நெல்லை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும் மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலானது , நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் வரும். இவ்வாறு இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர் மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |