தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் வரி செலுத்துவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் நேற்று ரயில் மூலம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொந்த ஊரின் அருகில் ரயில் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரி செலுத்துவதற்கான கடமையை வலியுறுத்தினார். அதில் அவர் பேசியதாவது: “சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில், சில ரயில்கள் நிற்பதில்லை. ஆனால் அப்படி ரயில்கள் நிற்காமல் சென்றால் நமக்கு மிகவும் கோபம் வருகிறது. ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்துகிறோம்.
இல்லையென்றால் ரயிலுக்கு தீ வைக்கிறோம். இது யாருக்கு இழப்பு? இது அரசு சொத்து என்று மக்கள் கூறுகிறார்கள். உண்மையில் அது வரி செலுத்துவோரின் பணம். எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் கூறுகிறேன். ஜனாதிபதி தான் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர். ஆனால் அவரும் வரி செலுத்துகிறார்.
நான் ஒவ்வொரு மாதமும் 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன். எனக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் பகுதிக்கு மேல் நான் வழியே செலுத்துகிறேன். நான் சேமிப்பதை விட நமது அதிகாரிகள் அதிகம் சம்பாதிக்கிறார்கள், ஆசிரியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இந்த வரிகள் வளர்ச்சிக்கு பயன்படும் என்பதை விளக்குவதற்காக இதை கூறுகிறேன்” என்று அவர் பேசியிருந்தார்.