Categories
ஆன்மிகம் இந்து

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது…? பூஜை தோன்றிய வரலாறு கதை… வாங்க பார்ப்போம்…!!!

செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த சுசந்திரா என்ற மாகாராணியின் மகள் தான் சாருமதி. தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட, அவர் நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கப்பட்டாள். மாமனார், மாமியார் மீது மரியாதை, கணவர் மீது அன்பு, இப்படி ஆகச் சிறந்த குடும்ப பெண்ணாக சாருமதி திகழ்ந்தார். அவரை பார்த்து மகாலட்சுமியே வியந்து போனார்.

அப்படி மகாலட்சுமி மகிழ்ந்து சாருமதிக்கு கனவில் தோன்றி சொன்ன ஒரு விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் வீட்டில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன். என் அருள் பூரணமாக கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த விரதத்தை கடைப்பிடித்தாலும், விரத முறையை மற்றவருக்கு சொன்னாலும் புண்ணியம் கிடைக்கும் என்றார். இப்படி தான் வந்தது வரலட்சுமி விரதம். இந்த நாளில் அம்மனை நினைத்து வணங்கினால் பதினாறு வகை செல்வத்தையும் லட்சுமி தேவி வழங்குவால் என்பது ஐதிகம்.

Categories

Tech |